இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் முடிவுகள் தரும் த்ரில் !!!

படம்
பாட்டியும், அம்மாவும் சேர்ந்துச் சொன்ன தேர்தல் கதைகள் ! ============================================== அச்சு அசலாக இன்றைய தினம் போலவே 1967 சட்டசபைத் தேர்தலுக்குப் பின், “ காங்கிரஸ் முதலாளிகளின் ஆட்சி இறங்கப்போகிறது, ரூபாய்க்கு மூன்று படி அல்லது ஒரு படியாவது அரிசி கிட்டிவிடும்” என்கிற பெருமகிழ்ச்சியில், வால்வு செட் ரேடியோ பெட்டி அருகே விடியலுக்காக காத்துக் கிடந்திருக்கிறார்கள் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள். அப்போதைய செண்டிமென்ட் படி(இப்போதும் எப்போதும் கூட) ”முதல் செய்தியில் எந்தக் கட்சி அதிக இடங்களில் முன்னிலை என்கிறார்களோ அவர்களே முழு வெற்றி பெறுவார்கள்” அதன்படியே முதன்முறையாக 1967ல் தமிழகத்தை ஆள்வதிலிருந்து காங்கிரஸ்க்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.  இனி நாமாக அழைத்தால் கூட ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பார்களேயன்றி என்றுமே தமிழகத்தை அவர்களால் ஆள முடியாது :)   ஆல் இந்தியா ஆகாஷ்வாணியில் அண்ணாதுரை தலைமையிலான திமுக பலப்பல இடங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை என்று முதல்சுற்று தேர்தல் முடிவுச் செய்திகளில் சொல்லியிருக்கிறார்கள். காங்கிரஸ்க்கு மட்டுமே வாக்

CREDIT CARD அராஜகங்கள் (ஒரு சாம்பிள்)

படம்
இந்தப் பெரிய அப்பாடக்கர் கம்பெனிகளின் தைரியத்திற்கு, எனக்கு நடந்த சம்பவம் சின்ன சாம்பிள். ஐசிஐசிஐ பேங்க் நான் கோராமல்(எப்போதோ கோரியிருந்தேனாம், அப்போது ரிஜக்ட் பண்ணிவிட்டார்களாம், அவர்களாக மறு பரிசீலனை பண்ணி அனுப்பினார்களாம்) ஒரு கடனட்டையும், 15000/- ரூபாய்க்கு ஒரு DD யும் எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதெப்படி நாம் கோராமல் அனுப்ப முடியுமென்பவர்களுக்கு ஒரு ப்ளாஷ்பேக். 2002 - 2003 காலங்களில் வட சென்னையில் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு க்ரெடிட் கார்டு வழங்கப்படக் கூடாதென ரகசிய சுற்றறிக்கை வங்கிகளுக்கிடையே உண்டு.  இது தெரிந்திருந்தும் திடீரென விதிகள் மாற்றப்படலாமெனக் கருதி பேங்க் ஏஜண்ட்கள் எங்கள் வங்கியில் ’உங்களுக்கு நாங்கள் வாங்கித் தருகிறோம்,  நீங்க ஃபார்ம ஃபில்அப் பண்ணிக் கொடுங்க’  என்று வாங்கிச் செல்வர். ஆனால், பலமுறை ’வி ரெக்ரெட் டு இன்ஃபார்ம் யுதட் யுவர் அப்ளிகேஷன் ரிஜக்டட்’ என்றே க்ளைமேக்ஸாக இருக்கும்.  பிறகெப்படியோ வட சென்னை ஆட்களையும் நம்பி எனக்கு ஒரு வங்கி துணிந்து க்ரெடிட் கார்ட் கொடுத்துவிட்டது. அவ்வளவுதான் ஏதாவது ஒரு பேங்க் கார்ட் கொடுத்துவிட்டால் போதும், வரிசையாக

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள் !!!

படம்
எனக்கு பவர்ஸ்டாரின் பாடி லாங்க்வேஜைப் பார்த்தாலே பத்திகிட்டு வரும்.  இந்த அழகில் சில வருடங்களுக்கு முன்பு, இங்கு, தெரிந்தோ/தெரியாமலோ, விளையாட்டுக்கோ/ரசித்தோ பலரும் அவரைப் பற்றிப் போற்றி, பதிவுகளாக வெளியிட்டுக் கடுப்பேற்றினர். அதன் பின்விளைவாய், அவரை பல பிரபல நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பில் நடிக்க வைத்தனர்.  பத்துக்கும் மேற்பட்ட பண மோசடி குற்ற வழக்குகளை அவர் மேல் பதிந்து, குண்டர் சட்டம் வரை அவர் மீது பாய்ச்சப்பட்டிருப்பினும், சிறிதும் பொறுப்பின்றி அவரை பலப் பிரபல ஊடகங்களும் விருந்தினராக தங்கள் நிகழ்ச்சியில் வரவழைத்து, மக்கள் மத்தியில் போலிப் பிரபல்யத்தை உருவாக்கினர் இப்படி,விளையாட்டுக்குச் செய்து உயர்ந்துவிடும் சில போலிப் பிரபலங்களால் நாடே நாசமாகிப் போகவும் வாய்ப்புண்டு.  அதற்கு அதி சிறந்த உதாரணமாய்த் திகழ்ந்தவர்தான் அடால்ஃப் ஹிட்லர். எதற்கு இத்தனை வியாக்கியானங்கள் கொடுத்தேனெனில் இங்கு பலருக்கும் ஹிட்லர் ஓர் ஆதர்ஸ நாயகன்.  நானே கூட என் டீனேஜில் ஹிட்லரின் பேப்பர் கட்டிங்கை வீட்டுச் சுவரில் ஒட்டி வைத்தவன்தான், காரணம் நம்மை பெரிதாய் ஆட்டுவித்த வெள்ளைக்காரனை சில வருடங்களுக்கு தூங்க