கரிக்கும் கண்ணீர் !!!
உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! ஆனால் நீங்கள் உச்சிவெயிலில் அண்ணாசாலையில் வியர்வை வழிய பல மணி நேரம் காத்துக்கிடந்ததில்லை உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! உங்களின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இருப்பிடங்கள் ஒருபோதும் எவராலும் பறிக்கப்பட்டிருக்காது உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! மகாமக ஜலக்கிரீடையில் உங்கள் வீட்டாட்கள் எவருக்கும் காயம் கூட ஏற்பட்டிருக்காது உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! ஏன் என்றவுடன் ஆட்டோவும் எதற்கென்றவுடன் அரிவாளும் உங்களை நோக்கி வந்தே இருக்காது உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! ராஜா வீட்டுக் கல்யாணத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள் நேரில் பார்த்தனுபவிக்கும் பரவசத்தைக் கொடுத்தவரல்லவா அவர்கள் உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் ! இறந்தகாலத்தில் எவன் எக்கேடு கெட்டிருந்தால் எனக்கென்ன ? நிகழ்காலத்தில் என் வாழ்வை வளப்படுத்தியவர்கள் வாடினால் நானழுவேன் எனச் சொல்லும் உங்கள் கண்ணீர் உண்மையானதுதான் !!! நன்றி, ராஜா ராஜேந்திரன் சென்னை-1.