இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் கள்வனோ ? சிறுகதை

நான் கள்வனோ ? ================   சிறுகதை - ராஜா ராஜேந்திரன்     மிகவும் பிஸியாக இருந்த அந்த ஆந்திர வங்கி ஊழியர், என் செக்கை வாங்கி, தன் முன்னிருந்த கணினியில் ஏதோ தட்டிப் பார்த்துவிட்டு, "ஒனக்கு இனி அடுத்த மாசம்தான் பணம்" என்று செக்கை வேண்டாத விருந்தாளி போல விருட்டென்று என் பக்கம் தள்ளி விட்டார்.   "ஏன் சார், பத்து நாளா பணம் எதுவுமே ட்ரா பண்ணலையே ?’   "அதெல்லாம் மேனேஜரப் பாத்து பேசிக்க"   அடே கொல்** கூ மவனே ஒனக்கு தமிழ் அரைகுறைன்றதால இந்த மரியாதைக் குறைவ எல்லாம் தாங்கிக்க வேண்டிக் கிடக்கேன்னு மனசுக்குள்ள அவனத் திட்டிக்கிட்டே மேலாளர் அறை நோக்கிப் போனேன்.   மேலாளர் கேஷியரைக் காட்டிலும் பிஸியாக இருந்தார். அவரைச் சுற்றி ஏழெட்டு பேர் நின்றுக் கொண்டிருந்தார்கள்.   அரைமணி நேரம் கழித்து என்னைப் பார்த்தவர், ’யெஸ்’ என்றார்.   "சார், பணம் அடுத்த மாசம்ங்கிறாங்க சார், நான் பணம் எடுத்து பத்து நாளுக்கு மேல ஆச்சு, பாஸ் புக்க பாருங்க" என்று பாஸ்

பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்

படம்
ஒரு சிறு குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வோம். என்னதான் பெரியார் விரும்பியாக இருந்தாலும், இந்தத் தாலி அகற்றும் சடங்கெல்லாம் தேவையில்லாதது என்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்துமேயில்லை. பிறகேன் இவர்கள்(திராவிட கழகத்தினர்) இதை வலுக்கட்டாயமாக செய்கின்றனர் என்றால் பெரியாரின் அதிர்ச்சி வைத்திய முறை இதுதானாம் ! இப்போதைக்கு இவர்களுக்கு வேறு தொழில் இல்லையென்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்தக்காலத்தில் ஏதுமறியா அப்பாவிகளை மனு தர்மம், ஸாண்டில்ய சாஸ்திரம், வேதங்களையெல்லாம் மேற்கோள் காட்டி பயங்காட்டிப் பார்த்த ஒரு சில இனங்களின் தோலுரிக்க பெரியார் மேற்கொண்டதுதான் பல அதிர்ச்சி முறைகள். முதலில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். திருமணங்களிலும் தேவையற்ற சடங்குகள் எதுவுமே தேவையில்லை, எந்தப் பண்டிதர்களின் உதவியேயில்லாமல் நம் திருமணங்களை நடத்திக் கொள்ள வேண்டுமென்றுதான் அவர் சுய மரியாதை திருமணங்களை ஊக்குவித்தார். அப்படிப்பட்ட நிறைய திருமணங்களை நடத்தியும் வைத்தார்.