இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தக் கதை எழுதியதற்கு நான் வெட்கப்படுகிறேன். மன்னித்து விடுங்கள் :-((

ஆக்ரோஷத்துடன் இருந்த அந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்கும்போதே மனதுள் கொஞ்சம் கிலி பரவியது.  இத்தனை நாட்களுக்குப் பிறகும் இதெப்படி இந்த நெருப்பு இன்னும் அணையாமல் இருக்கிறது என அர்விந்த் ரதோர் ஆச்சர்யப்பட்டான்.  கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடியப் போகிறது, அக்கோரச் சம்பவம் நடந்து.  நேர்மையான, துணிவான அதிகாரிதான் இந்தக் கொடூரத்தை விசாரிக்கவேண்டும், இதற்கு சரியான ஆள் இவர்தான் என்று பலரின் ஏகோபித்த ஆதரவுடன், கடைசியாய் அர்விந்த் தேர்ந்தெடுக்கப்பட்டான்.  அதன்படியே, அர்விந்த் மிகச் சரியான கோணத்தில், எந்த அரசியல் இடையூறுமின்றி, சாட்சிகளை சரியாகச் சேர்த்து, அந்தக் கொடுமைக்காரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை அடுக்கி வைத்திருந்தான்.  நாடு முழுக்க பெருங்கோபத்தை கிளறி விட்ட இந்த பாலியல் வன்முறை வழக்கு, விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு வாரத்தில் தீர்ப்பு வரும் நிலையை எய்தியுள்ளது.  நிச்சயம் ஒரு குற்றவாளி கூட தப்ப முடியாத அளவு, வலையைப் பின்னியிருந்தான் அர்விந்த்.  செண்டிமெண்ட் கேஸ் வேறு என்பதால் அதிகபட்ச தண்டனையை பெறுவார்கள் என அர்விந்த் உறுதிபட இருந்தான்.  ஆனால்,

குயிலினிது குழலினிதென்பார்.......

படம்
பெருந்திடுக்கிடலோடு விழித்தெழுந்தமர்ந்தேன்...... தீங்கனவுமில்லை எவரும் எழுப்பியிருக்கவுமில்லை....... க்ரிக் க்ரிக் க்ரிக் க்ரிக் ரீங்காரமட்டும் எங்கோரத்திலிருந்து கசிந்தோடிக் கொண்டிருந்தது ! நா வறண்டு குளிர்ந்த நீர்க் கோர....... அடுக்களை சென்று ஸ்விட்சைப் போட்டேன்...... வெள்ளமென வெளிச்சம் பாய பாய்ந்து பதுங்கின கரப்பான்கள் ஏழெட்டு ! தேகம் கூசி அருவெறுப்பில் சிலிர்த்தேன்...... இவ்வுலகில் வெறுக்கப்படும் தலையாய ஜந்தல்லவா அது...... தாகத்தை தவிக்க விட்டுவிட்டு பூச்சிக்கொல்லி திரவத்தை பார்வையால் துழாவினேன் ! மழலைப்பருவத்தில் பாடப்புத்தகத்தில் பெரிதாய் வரைந்திருந்ததை தவறாய் ஊகித்து....... தேனீக்கள் எங்கிருக்கும் என்ற கேள்விக்கு 'கக்கூஸில்' என்று பதிலளித்த..... மீரான்தான் கற்றுக்கொடுத்தான் எப்படியெல்லாம் துன்புறுத்திக் கொல்லலாம் கரப்பான்களை என்று ! என்னை ஓர் அறையில் பூட்டிவைத்து...... ஒரு பறக்கும் கரப்பானை விட்டுவிட்டால் பயத்தில் மரணித்தே விடுவேன்...... அதன் எண்ணற்ற கால்களும் கால்கள் முழுக்க முடிகளும் அரையடி மீசையும் ச்சீ ச்சீ ! ஆத்திரம் தீருமட்டும் தெளித்தவாறே இருந்தேன்...

வா வா வால்மார்ட் ........!

படம்
வால்மார்ட் வருகையால் திவாலாகப் போவது ரிலையன்ஸ் 'ப்ரஷ்' , நீல்கிரிஸ், மோர், பிக்பஜார், இன்னபிற பெரிய 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்'  போன்ற ஜாம்பவான்களின் கடைகள் மட்டுமே.    பிறகெதற்கு சில்லறைக்கடை வியாபாரிகள் வாழ்வு  நாசமாகும், விவசாயிகள் அழிவார்கள்,  மக்கள் துயருருவார்கள் என்ற கூக்குரல்கள் ?   அது உண்மையா...........பார்ப்போமா ? வால்மார்ட் என்பது உலகத்தின் பெரிய டிபார்ட்மெண்டல் கடைகள் அமைக்கும் ஒரு நிறுவனம்.  கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடிய எல்லாமே ஏறக்குறைய கிட்டிவிடுமல்லவா ?  அதுபோல, இந்தக் கடையில் உங்களுக்கு வேண்டுவன உலகில் எந்த மூலையில் இருந்தும் கொண்டுவந்து கொடுக்கப்படும்.  எத்தனை கார்கள், எத்தனை பைக்குகள் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள பார்க்கிங் வசதி இந்தக் கடையில் இருக்கும்.  பொருட்களை நீங்கள் கிஞ்சித்தும் சுமக்காமல், கேட்டதை உங்கள் காலடியில் வந்து கொட்ட பணியாட்கள் டை கோட்டுடன் வலம் வருவர்.  எல்லாக் கார்டுகளும் ஏற்கப்படும்.  வங்கி உத்திரவாதம் கொடுத்தால் உங்களுக்கு கடனும் கொடுக்கப்படும்.  டோர் டெலிவரி கிட்டும்.  ஆரம்பக் கால சலுகை பண்டிகைகாலச் சலுகை, ரெ

கப்பலோட்டிய தமிழன்

படம்
இன்று கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாள்.  இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.  எனினும், இவரைப் போன்ற நிஜக் கதாநாயகர்களைப் பற்றி, பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.  ஒன்றிரண்டு தெரியாதவர்கள் கூட அறிந்துதான்  ஆக வேண்டும் என்பதற்காக இந்த மிகச் சுருக்கமான பதிவு.  (பிறந்தநாள் அன்றாவது நினைக்கிறார்களே என்று அந்த ஆத்மா நிம்மதியாய் உலவட்டும்) பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிகளிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பங்களிலும்தான், நம் நாட்டில் சுதந்திர வேட்கை வீறு கொண்டது.  விடுதலைப் போரில், கோபாலகிருஷ்ண கோகுலே, பாலகங்காதர திலக், போன்ற முன்னோடி வீரர்களின் போட்ட,  பலமான அஸ்திவாரத்தில், மோகன்தாஸ், ஜவஹர்லால், பாரதியார், நேதாஜி போன்றோர் வீரமான கட்டிடத்தை எழுப்பினார்கள். மகாத்மா, வெள்ளையனுக்கு எதிரான போரில்,  தன்னுடைய புதுப் புது அஸ்திரங்களை எய்துக் கொண்டே இருந்தார்.  அதில் ஒரு சிறந்த  அஸ்திரம்தான் சுதேசிக் கொள்கை.  அது சரி, சுதேசி என்றால் என்ன ?  சுதேசி = சுய தேஷ் = சொந்தநாடு அவ்வளவுதான். வெள்ளையன், நம்முடைய பாரம்பரிய பயிர் முறைகளை பயிரிட, விவசாயிகளிடம் தவிர்க்கச் சொன்னான்.  மறுத்தவர்களை மிரட்டினான்

நான் உளறிக்கொண்டே இருப்பேன் !!!

படம்
சுடச்சுட மட்டன் பிரியாணியும், உடன் கத்தரிக்காய் மற்றும் வெங்காயப் பச்சடி, முடிவாய் சாப்பிட பிரட்ஹல்வா என்று, இன்றைய மதியத்தை சிறப்பாய் ஆக்கிய நண்பனைக் கட்டிபிடித்து வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு, அப்படியே குட்டித்தூக்கம் போட்டிருந்தால் நிச்சயம் நிம்மதியாய் இருந்திருப்பேன், ஆனால் நம்ம அரசியல்வாதி லகுடபாண்டிகள் எப்போது நம்மைச் சுகமாக உலவ விட்டிருக்கிறார்கள் ? 'கொஞ்சமாய்த் திருடிக் கொள்ளுங்கள் என்று இருக்கிற ஓரிரு நல்ல அதிகாரிகளையும் லஞ்சம் வாங்க ஊக்குவித்த ஒன்று..... 'தீர்ப்பை விலை கொடுத்து வாங்கலாம்' என்று பணக்காரத் திருடர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய மற்றொன்று..... இதெல்லாம் ஓல்டு நியூசாச்சா,  இன்னிக்கு ஒன்னு ரம்ஜான் ஸ்பெஷலா உளறிருக்கு,  உளறின நாயகர் பெயர் 'பேனி பிரசாத் வர்மா' அவர் உதிர்த்த முத்துக்கள் 'விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து அதனால் அவர்கள் லாபம் அடைவார்கள் என்பதால் பணவீக்கம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது' என்னங்க, இவர் விவசாயிங்க, நல்லாருக்கனும்னு ஆசப்படுறாரு, அவரப் போயி தப் சொல்றீங்களேன்னு யாராவது கேட்டீங்கன்னா, நீங்க, 'பணவீக்கம் என்றால்,

இந்தியச் சுதந்திரதினத்தை நான் ஏன் கொண்டாட வேண்டும் ?

படம்
நீங்கள் ஒரு இந்தியப் பெண்ணாயிருந்தால்.... நீங்கள் தாழ்த்தப்பட்டவராயிருந்தும், பிற்படுத்தப்பட்டவராயிருந்தும், ஆதிவாசியிருந்தும், ஏழையாயிருந்தும் படித்திருந்தால் .... ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தால்.... இந்துவாயிருந்தால்..... இந்து அல்லாத வேற்று மதத்தினராய் இருந்தால்..... தமிழ் நாட்டில் வாழும் வேறு மாநிலத்தவராய்  இருந்தால்.... இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழனாய் இருந்தால்.... நாத்திகராய் இருந்தால்.... அரசியல்வாதியாய் இருந்தால்.... ஊழலை வெறுக்கும் கருத்துச்சுதந்திர வீரனாய் இருந்தால்.... ரொம்ப இழுத்தாச்சு, நீங்க இந்தியனா இருந்தா, ஏன் இந்தியாவுல இருக்கிற அன்னியனா இருந்தாலும் சரி, இந்தியச்  சுதந்திர தினத்தை  நீங்கள் மிகு உற்சாகமாக  கொண்டாடியே ஆகவேண்டும்.  முடியாது, இந்தக் கொண்டாட்டத்தை மறுக்கும் சுதந்திரம் எனக்குள்ளது என்று நீங்கள் கொதித்தால் அது, கொண்டாடும் நாங்களோ, அல்லது என் தாய்நாடோ உங்களுக்குப் போட்ட பிச்சை.  பிச்சைக்காரர்களையும் வெறுக்காத தேசம் எங்களுடையது. அதனால்தான் தொழுமிட வாசல்கள் எங்கும் அவர்களை விட்டுவைத்துள்ளோம்.   ஆனால் 

உத்தம எழுத்தாளனாக ஆவது எப்படி ?

தனிக் குடித்தன மனைவி பேறுகாலத்தில் பிரியும் போதுதான், சில விரும்பக்கூடிய, பலர் வெறுக்கக் கூடிய, விபத்துகள் நடந்து விடுகின்றன,  எனக்கு நிகழ்ந்ததா இல்லையா என்பது,  என்னை விட உங்களுக்குத்தான் முதலில் தெரியப்போகிறது.  இருங்கள், மிருதுளா உள்ளே நுழைகிறாள், நீங்கள் கொஞ்சம் அப்புறமாய் வாருங்கள். "இந்தாங்க டின்னர், நீங்க கேட்டா மாதிரி சிம்பிளா எடுத்துட்டு வந்திருக்கேன்" மிருதுளாவின் குரல் பெயருக்கு ஏற்றார் போல மிருதுவாகவெல்லாம் இல்லை, லேசாய் நம்ம அங்காடித் தெரு அஞ்சலி போலத்தான் இருக்கும், ஆனால் என்னுடன் பேசும்போது மட்டும் அவள் குரலில் கொஞ்சம் தேனைக் குழைத்துப் பேசுவாளா......அடடா அந்த கிக் எந்த சரக்கிலுமே கிடைக்காது.  மரபுப்படி இங்க மிருதுளாவை வர்ணிக்கணும், ஆனா குரலிலேயே இவ்வளவு போதை இருக்கிறப்போ, அதெதுக்கு வெட்டியா ?  உங்களுக்குப் புடிச்ச செம கட்டைய கற்பனை பண்ணிக்குங்க, அதுசரி, உங்களைத்தான் அப்பவே போகச் சொல்லிட்டேனே ? "யேய், நான் வேணாம்னுதாம்பா சொன்னேன், சாப்டுட்டேனே" என்றேன்.  இப்படி சீண்டினால்தான்  அவள் முறைக்கும் சாக்கில் தலையை சாய்த்து ஒரு பார்வை பார்ப்பாள், அந்த அழ

ஒரு டைமிங் ஸ்டோரி :)

'ஏன் இவ இப்படி வற்புறுத்துரா ?  என்னாலதான் ஒழுங்கா எல்லா நாளும் இருக்க முடியாதே ?  நடு ராத்திரில மொதல்ல எழுந்திரிக்கவே முடியாது.  அப்புறம் சாயங்காலம் முடிக்கப் போகணும், என் ஆபிஸ் பக்கத்துல அதுக்கு எங்க போகணும்ன்னு இதுவரை தெரிஞ்சிகிட்டதில்ல. ஒரு மணி நேரத்துக்கொரு முறை டீ குடிக்கலன்னா தலைவலி வரும்.  அப்புறம் நைட்டு தூங்க அது வேணும், அதுவும் வேணும், புரிஞ்சி தொலைய மாட்டாளே லூசு,  நீதான் இருக்கல்ல, விடேன், நானும் வைக்கணுமாம், பசங்களும் வைக்கணுமாம்.......ஸ்பென்சரைத் தாண்டியவன், பச்சை மஞ்சளாகி சிவப்பானவுடன், தலைக்கு மேல் கையைத் தூக்கி சைகை காட்டியவாறு வண்டியை நிறுத்தினான் இம்தியாஸ். பச்சை ஒளிர்ந்தவுடன் வேகமாக வண்டியை முடுக்கினான்.  புது வண்டி, முப்பதாவது வினாடியிலேயே எண்பதைத் தாண்டியது.  மெட்ரோ வேலைகளில் ட்ராபிக் நெருக்கடி இல்லை, ஆனால் டைவர்ஷன்  தெரியாமல் புதிதாய் நுழைபவர்களுக்கு நிறைய குழப்பங்கள் உண்டு, பாவம் அவர்களுக்கு விளக்க ஆட்களும் இல்லை.  ஒழுங்கற்ற முறையில் யாராவது சிலர் ஓட்டியபடியேதான் இருந்தனர்.  தூரத்தில் தாராபோர் டவர் சிக்னலிலும் பச்சை, ஆனால் வினாடிகள் உதிர்ந்தபடியே, உயிர

மன்னிக்கவும் இது ஒரு சுயதம்பட்டம் :(

அம்மா சென்டிமென்ட்டை விட உலகில் வேறேதும் பெரிய பாசப்பிணைப்பு இருந்துவிட முடியுமா என்ன ? என் தாய் என்னை மிகச் செல்லமாக, எல்லாச் சுதந்திரமும் கொடுத்து, அந்தச் செய்கையின் விளைவால் நிகழும் சங்கடங்களைச் சகித்து, தியாகத்தை உணர்த்தியவள். அப்பேற்பட்ட தாயே, மாமியார் எனும் ஒரு பதவி உயர்வு கிடைத்தவுடன், அதிகார போதையில், சற்றேத் தடுமாறி, என் மனைவியைக் கட்டுப்படுத்துவதாய் எண்ணி, என் உரிமையில் தலையிட ஆரம்பித்தாள்.  (வாரம் வாரம் அதென்ன சினிமா, நீதான் அவனுக்கு எடுத்துச் சொல்லணும், ஒரு பொண்ணு தலையில இத்தனை பூவ வச்சிட்டு, நக நட்ட போட்டுட்டு நைட்டு பன்னெண்டு மணிக்கு வந்தா என்ன அர்த்தம்,  வெளில சாப்டுட்டு வரணும்னு காலைலயே முடிவு பண்ணிருப்பீங்க,  அதச் சொல்லித் தொலச்சிருக்கலாம்ல்ல, ஏன் ஞாயித்துக் கிழம இப்படித் தூங்குறான், முன்னெல்லாம் இப்படியில்லையே....? நான் இன்றும் என் தாயை உயிராய் நேசிக்கிறேன், அம்மா பெயர் பொறித்த பலகையைத் தாங்கிய வீட்டைக் கட்டி, அங்கு அம்மாவின் கையால் பால் காய்ச்சி, வசிக்கவைத்து மகிழ்ந்தேன்.  ஆனால், என் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்காக, தாயைப் பிரிந்து வாடகை வீட்டில் வசிக்கிறேன் மன

பிற்பகல் செய்யின் (தம்மாத்துண்டு கதை)

சட்டென்று அவளைப் பிரிந்தேன், திடீரென ஒலித்த அழைப்புமணியின் கிர்ர்ர்ர் ஓசைதான் அதன் காரணி.  அவள் ஆடையை அவசர அவசரமாக திருத்திக் கொண்டாள், நான் என் சிகையை.  "என்ன பண்ணிட்டு இருக்கீங்க உள்ள, எதுக்கு கதவு தொறக்க இவ்ளோ நேரம் ?"  வினாவுடன் உள்ளே நுழைந்த விமலா, அவளைப் பார்த்ததும் உக்கிரமானாள்.   "ஓஹோ, வெறும் பேச்சா இருந்தத ப்ரூவ் பண்ணுறீங்களோ, ஆள் இல்லாத சமயமா பாத்து என் பெட்ரூமுக்குள்ளேயே......?  சரி நான் இருக்கறதுதான உங்களுக்கு எடஞ்சல், என் பொண்ண மட்டும் முடிஞ்சா பாத்துக்கோங்க, அதும் கஷ்டம்னா அவள ஏதாது அனாத விடுதில சேத்துட்டு ஆடுங்க" என்று சொல்லிவிட்டு கெரசின் கேனையும், தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்து ஆத்திரத்துடன் கதவைச் சாத்தினாள்.  "அய்யய்யோ.....விமலா, நாங்க ஆபிஸ் அக்கவுண்ட்ஸ்தான் டேலி பண்ணிட்ருந்தோம், உனக்குத் துரோகம் பண்ணவே மாட்டேன், கதவத் தொறடி, நீ இல்லன்னா, நாங்க அனாதையா நிப்போம்" என்று நான் கதவைத் தட்டி கையாலாகாமல் அலறிக் கொண்டிருந்தேன். அப்போது என் தலையில் யாரோ ஓங்கி அடித்தார்கள். மலங்க மலங்க விழித்தேன்.  நீல இரவுவிளக்க
பொஸஸ்ஸிவ் பொண்டாட்டி   நான் நேசிக்கும் எந்தப் பெண்ணையும்    அவளுக்கு பிடிக்காது அது அம்மாவானாலும் ( என் )....... சரி மகளேயானாலும் சரி .......!

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தப் பிரம்மனைக் கண்டு :(

படம்
இந்தச் செய்தி கண்ணீரை வரவழைப்பதோடு மட்டுமல்லாமல், கொஞ்சம் சிந்திக்கவும் சொல்கிறது.  மத்திய மாநில அரசுகள் இதைக் கருணையோடு அணுக வேண்டும்.  ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம், சட்டத்திற்குட்பட்டு அரசால் மட்டுமே முடியும், இது குற்றவாளிகளுக்கு மட்டுமே என்கிறது சட்டம், ஆனால் வயதுக்கு வந்த இந்தப்பெண் படும் பாட்டைப் படித்தபோது, சட்டத்தைக் கொஞ்சம் திருத்திக் கொள்ளலாம் ! தினமணியில் நேற்று(03/07/2012) வெளியான செய்தி இது.  மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த அழகர், ஜெயாவுக்கு 1999 ல் மனவளமும், உடல்வளமும்(மாற்றுத் திறனாளி) அறவே குறைந்த பெண்குழந்தை பிறக்கிறது.  தாய்க்குத் தன்னுடைய குழந்தை பொன் தானே ?  எனவே கண்ணும் கருத்துமாய் வளர்த்தார் அந்தத் தாய்.  அந்தக் குழந்தை பகலெல்லாம் தூங்கும், இரவானாலோ பெருங்குரலுடன் அழுவும், பெற்றோரில் யாராவது ஒருவன் கொட்ட கொட்ட இரவு முழித்திருந்து அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  மல ஜலமல்லாம் இருக்கும்  இடத்திலேயேதான் !  கொடுமையைப் பாருங்கள், இப்போது இவள் பருவமும் அடைந்துவிட்டாள்.  இதுமட்டும் சரியான வயதில் நிகழ்ந்துவிட்டது, என்ன எழவு லாஜிக்கோ ? இப்போ

இவன் அவன் (சிறுகதை)

படம்
நாங்க இந்த அபார்ட்மென்ட்ல குடியேறி சில மாதங்கள்தான் ஆகின்றன !   எங்களுக்கு கல்யாணமும் மூன்று வருடங்களுக்கு முன்புதான் நடந்தது , காதல் கல்யாணம் !    கருப்பாயிருந்தாலும்   களையாகவும் , சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரத்தில் பால் வடியும் முகம் இவனுக்கு , இலகுவாக என்னைக் கவர்ந்து விட்டான் !   நாங்கள் நாயுடு , இவன் கண்டிப்பா எங்க ஜாதி இல்ல , அம்மா கடுமையாக எதிர்த்தார் , ஆச்சர்யமாக அப்பாதான் அம்மாவை ஆறுதல் படுத்தி , எங்கள் மணம் நடைபெற உதவி புரிந்தார் !   அவுங்க வீட்டில சுத்தம் , இதுவரை ஒரு ஈ காக்கா கூடத்   தேடி வந்ததே இல்ல .   ஒரே வருடத்தில் என்னை அம்மாவாக்கி விட்டான் , அழகான பெண் குழந்தை ! அப்புறமென்ன வழக்கம்போல அதுதான் , இவன் இப்பல்லாம் , எரிஞ்சு எரிஞ்சு விழுறான் !   அழுகிற குழந்தைய ' கொஞ்சம் தூக்கி தட்டுங்களேன்னு ' சொன்னாக்கூட கொஞ்சமும் கருணையில்லாம ' அந்த சனியன நீயே கொஞ்சு ' என்பான் ! பால் வடிஞ்ச மூஞ்சா அது ? ஆசிட்டாத்தான் வழியுது இப்ப ! கல்யாணமான புதுசுல நான் வேலைக்கு போயிட்டுரந்தப