இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!

படம்
கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் ******************************************************************** ஒரு வருடமாய் அலமாரியில் தூசி படிந்து , புது புத்தகத்திற்குரிய வாசனையை கிட்டத்தட்ட இழந்திருந்த இந் நூலை , சமீபத்தில் சென்றிருந்த பிஸினெஸ் டூரில் , ரயில் பயணவேளைகளின் போது வாசித்தேன் . வாசிக்க ஆரம்பித்தவுடன் அசூயையின் காரணமாக முகம் சுளித்து அவதிப்பட்டேன் . அல்குல் , கொங்கை , சிதி , சுண்ணி என தொடர்ந்து பத்திக்கு பத்தி கவுச்சி .  அய்யய்யோ , இந்தப் புத்தகத்தைப் போய் திறந்தவெளியில் வைத்திருந்தோமே , வீட்டுப் பெண்மணிகள் எதேச்சையாய் வாசித்து நம்மைப் பற்றி என்ன நினைத்திருப்பார்களோ என்ற கிலி வேறு பற்றியது. பெருமாள்முருகனே ஆரம்பத்தில் , சொந்தப் பெயரை மறைத்து , புனைப் பெயரில்தான் இதைத் தொடராக எழுதினாராம் ! ஆனால் , இந்த நூலை முழுதாய் வாசித்ததும் , செக்ஸ் & ஆண் பெண் பாலியல் உறுப்புகள் பற்றி பேசும் போதோ , எழுதும் போதோ , வாசிக்கும் போதோ , நாம் போடும் போலி வேஷங்களையும் , நம் பண்டைய இலக்கியவாதிகளின் சுதந்திரத்தையும் ஒப்பிட்டபோது , இயல்பை , அவசியமான ஒன்றை , இப்படி மூடிப் பேசி மூடிப் ப

உபதேசமொன்று !!!

படம்
'வெறிநாய்த் தொல்லை அதிகமாகிவிட்டதே ?’ வினவியது அண்டைவீட்டு ஷேக்முகமதுவிடம்.. 'என்ன செய்ய, அதற்கேன் அது பிடித்ததென நீதான் சிந்திப்பதேயில்லையே.. ?’ 'ஏனாம் ?’ என்றேன் நான் 'ஓயாமல் அதன்மீது கல்லெறிந்து விளையாடிய பாலகர்களை தடுத்ததுண்டா நீ ?’ சுருக்கென்று வலிக்க, மிஷ்கின் கதாபாத்திரமாய் தலைகவிழ்த்தேன்.  'இப்ப நான் என்ன செய்ய ?’ 'வா....அது கடித்து இன்னும் பல நாய்களுக்கும் வெறியேறிவிடாமல் தடுக்க அதைச் சமாதானம் செய்வோம் !’ தலை நீவ ஆர்வத்தோடு முதலில் போன என் கையை கடித்ததது ! தன்னை நோக்கிப் பாய்ந்த அதைப் பயமுறுத்த கல்லைத் தேடிக்கொண்டிருந்தான் ஷேக் முகமது !!!