இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குயிலினிது குழலினிதென்பார்.......

படம்
பெருந்திடுக்கிடலோடு விழித்தெழுந்தமர்ந்தேன்...... தீங்கனவுமில்லை எவரும் எழுப்பியிருக்கவுமில்லை....... க்ரிக் க்ரிக் க்ரிக் க்ரிக் ரீங்காரமட்டும் எங்கோரத்திலிருந்து கசிந்தோடிக் கொண்டிருந்தது ! நா வறண்டு குளிர்ந்த நீர்க் கோர....... அடுக்களை சென்று ஸ்விட்சைப் போட்டேன்...... வெள்ளமென வெளிச்சம் பாய பாய்ந்து பதுங்கின கரப்பான்கள் ஏழெட்டு ! தேகம் கூசி அருவெறுப்பில் சிலிர்த்தேன்...... இவ்வுலகில் வெறுக்கப்படும் தலையாய ஜந்தல்லவா அது...... தாகத்தை தவிக்க விட்டுவிட்டு பூச்சிக்கொல்லி திரவத்தை பார்வையால் துழாவினேன் ! மழலைப்பருவத்தில் பாடப்புத்தகத்தில் பெரிதாய் வரைந்திருந்ததை தவறாய் ஊகித்து....... தேனீக்கள் எங்கிருக்கும் என்ற கேள்விக்கு 'கக்கூஸில்' என்று பதிலளித்த..... மீரான்தான் கற்றுக்கொடுத்தான் எப்படியெல்லாம் துன்புறுத்திக் கொல்லலாம் கரப்பான்களை என்று ! என்னை ஓர் அறையில் பூட்டிவைத்து...... ஒரு பறக்கும் கரப்பானை விட்டுவிட்டால் பயத்தில் மரணித்தே விடுவேன்...... அதன் எண்ணற்ற கால்களும் கால்கள் முழுக்க முடிகளும் அரையடி மீசையும் ச்சீ ச்சீ ! ஆத்திரம் தீருமட்டும் தெளித்தவாறே இருந்தேன்...