இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏன் கசந்தார் சாரு எனக்கேன் கசந்தாரோ ?

சாருவின் அதி தீவிர வாசக மற்றும் ரசிகர்களே..... அழகாய் ஒரு காதல் வந்தவுடன் , காதலி சொன்னாள் என சில நண்பர்களைத் துறப்பதில்லையா ......... மனைவி வந்தவுடன் அத்தனை நாள் அன்பு காட்டிய அம்மா திடுமென வில்லியாகத் தோன்றுவதில்லையா .......... மக்களுக்கொரு கருத்தும் , தனக்கொரு கருத்துமாய் வாழும் கொளுத்த அரசியல்வாதியை விட்டு வெளியேறி , எதிர்கட்சியால் கொஞ்சம் செழிப்பான தொண்டன் , முன்னாள் தலைமையை தூற்றுவதில்லையா ......... அதுபோலத்தான் , கொஞ்சம் நல் இலக்கிய அறிவு எனக்கு கிட்டக் கிட்ட , உங்களின் பார்வைக்கு நிறைகளாய் தெரிவதே எனக்குக் குறைகளாய் தென்பட ஆரம்பித்தது . எனவேத்தான் என்னுடைய இந்த நிலை மாற்றம் . இயன்றவரை சாருவின் எழுத்துகளில் இருந்துதான் விமர்சித்துள்ளேன் . ஒரு சில இடங்களில் மட்டும் தனிப்பட்ட , ஆனால் சாட்சியங்கள் இருக்கும் சில சம்பவங்களைச் சொல்லியுள்ளேன் . கண்ணதாசன் , " எழுத்தாளனின் எழுத்துக்களைப் பின்பற்று , அந்த எழுத்தாளனை அல்ல " என்கிறார் .  எனவே எழுத்துகளை எழுத்தாளனுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் , சாருவின் எழுத்துக்களை விமர்சிக்கும் என்னுடைய எழுத்துக்களில்

நாட்டுக்கு இதெல்லாம் அவசியமாய்யா ?

படம்
நான் ரசித்த ஆளுமைகளெல்லாம் சிறுகச் சிறுக சரிந்து கொண்டே வருவதை கண்ணுறுகிறேன் ! 2010 ல் என்னுடைய டாப் 10 தமிழ் சினிமா இயக்குனர்களாக நான் பட்டியலிட்டவர்கள் :-  மணிரத்னம், ஷங்கர், பாலா, அமீர், கவுதம்மேனன், செல்வராகவன், மிஷ்கின், வெங்கட்பிரபு, சேரன், வசந்தபாலன் ! மணியின் பலம் இராவணனிலேயே தெரிந்துவிட்டது, சரி இனி இவரை க்ளாஸிக் வரிசையில் சேர்த்துவிடலாம் என முடிவு செய்த வேளையில் கடல் வந்து, அப்படி சேர்க்காவிட்டால் ’நீ முட்டாள்’ எனச் சொன்னது, ஆக, அந்த இடம் வெற்றிடமாய் உள்ளது. ஷங்கரைப் பொறுத்தவரையில் அவருடைய எந்திரன் & நண்பன் அபார வெற்றிதான் வணிகரீதியில். ஆனால் முன்னதை குப்பை என்றும், பின்னதை ரீமேக்தானே என்றும் மேதைகள் மட்டம் தட்ட முயல்கிறார்கள்.  அதைப்பற்றி ஷங்கர் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.  ஏனெனில் தன்னுடைய எஸ் ப்ரொடக்‌ஷன் மூலம் நட்டத்தைத்தான் சந்தித்துள்ளேன் என்கிறார்.  வணிக சினிமா மூலம் இவர் சம்பாதித்தால்தான் பிற புது சிந்தனையாளர்கள் மூலம் நல்ல படம் கிட்டும்.  எனவே பட்டியலில் இவருக்கே இப்போது முதலிடம் கொடுக்க வேண்டும்.  ஆனாலும் ஐ வந்துவிடட்டுமெனப் பார்க்கிறேன் !