நான் உளறிக்கொண்டே இருப்பேன் !!!
அத்தியாவசிய ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும், மத்தியஅரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்ட விலைக்குறிப்புகள் இருக்கும், இது சந்தை நிலவரத்திற்கேற்ப, ஏறவோ, இறங்கவோ செய்யும். வாராவாரம் வியாழனன்று முந்தைய வாரச் சந்தை நிலவரங்களை வைத்து இந்த INFLATION பற்றி அறிவிப்பார்கள். இயற்கை ஏமாற்றினாலோ, அல்லது அரசியல்வாதிகளும், அரசதிகாரிகளும் சேர்ந்துக்கொண்டு, பதுக்கல்காரர்களை வளரவிட்டாலோ, நாட்டில் விலைவாசி தாறுமாறாய் உயரும், அம்மாதிரிக் கட்டங்களில் பணவீக்கம் மேலும், மேலும் வீங்கும். எனவே அளவுக்கு மேல் வீங்கும் பணம் நமக்கு பெரிதும் ஆபத்து.
இம்முறை, தென்மேற்குப் பருவமழை கொஞ்சம் சொத்தப்பத்தான் செய்திருக்கிறது, இதனால் விவசாயம் உற்பத்தி எல்லா இடங்களிலும் சரிசமமாக இருக்காது, அதாவது கர்நாடகத்தில் விளையாதது மராட்டியத்தில் விளையலாம், உ.பி யில் ஏமாற்றிய மழை, ராஜஸ்தானில் நன்கு பெய்து அங்கு மட்டும் கோதுமை விளையலாம். இதனால் பரவலாய் விளையாத சில விவசாய உணவுப் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும், இதனால் விளைச்சலைக் கொடுத்த விவசாயிக்கு எப்போதும் கிடைக்காத விலை கிடைத்து அவன் வளமாவான், இதுதான் நம்ம பேதிவர்மா கூறிய கருத்துக்கு அடிப்படை.
அப்போது மழை ஏமாற்றியோ, அல்லது இதுவரை அவனுக்கு எந்த வசதியும் செய்துக் கொடுக்காத அரசு ஏமாற்றியோ, விளைச்சலைத் தரமுடியாத விவசாயியின் கதி ? அவனுடையத் தேவைக்கே அவனால் உணவை உற்பத்தி செய்ய முடியாத நிலையில், வீங்கிய பணவீக்கத்தில் அவனால் என்னத்தான் செய்ய முடியும் ?
முடியுதோ இல்லையோ, பொறுப்பில் இருக்கும் ஒருவன் தன்னுடைய வார்த்தையை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துத்தான் பேசவேண்டும். எங்களிடம் போதிய உணவுத் தானியங்கள் இருப்பு இருப்பதால் பணவீக்கமே இருக்காது என்றுதான் பேசவேண்டும், பதுக்கல்காரர்களைக் கட்டுப்படுத்த இதுபோன்ற பேச்சுக்கள் மட்டுமே உதவும், பணவீக்கம் வரும் என்று உளறினால் அவன் பதுக்கத்தான் தயாராவான். ஆனால் அப்படிச் சொல்கின்ற அரசியல்வாதிகள் எல்லாம் இப்போது கிடையாது, அவர்கள் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கையோடு மறைந்து போய் விட்டார்கள்.
ஆக, பணம் வீங்கினால் இழப்பு, பர்ஸ் வீங்கினால் மட்டுமே சிறப்பு (வீங்கின பர்ஸ பொண்டாட்டி/ காதலி கண்ணுல படாம வைக்கிற திறமையைப் பொறுத்து)
THE END
Well Said - vmkrish@yahoo.com
பதிலளிநீக்கு