இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடக்காதே.....முடக்காதே !

படம்
நம் இயல்பை, இந்த ஊடகங்கள் எவ்வாறெல்லாம் கட்டுப்படுத்தி, முன்னேறவிடாமல் முடக்கி விட்டிருக்கின்றன என்பதற்கு கீழே தொடரும் பத்தியே சான்று. // சீன குத்துச்சண்டை : வெள்ளியை உறுதி செய்தார் மன்ஜீத் சிங் சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் மன்ஜீத் சிங் 91 கிலோவுக்கு மேற்பட்டோர்க்கான எடைப்பிரிவு அரைஇறுதியில் சீனாவின் வாங் ஜீ பாவை வீழ்த்தி, இறுதிச் சுற்றை உறுதி செய்தார்.  சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில், சீனாவின் அகிப்பீர் யூசுப்பைச் சந்திக்கிறார் // ஆம், நமக்கு வெள்ளி கிடைத்தால் கூடப் போதுமாம். வெள்ளி வாங்கிவிட்டாலே பெருமையாம். இரண்டாமிடம் ஒன்றுமில்லாததற்கு பரவாயில்லையாம். அட, இதையே ’தங்கம் வெல்வாரா மன்ஜீத் சிங் ?’  அல்லது ’மன்ஜீத் சிங் தங்கம் வெல்ல வாய்ப்பு’ என்று எழுதினால் என்னவாம் ? அப்படி எழுதி, அவர் தோற்றுவிட்டால் நாம் ஏமாந்து விடுவோமாம்.  ஏமாறாமல், மனம் துவண்டு போகாமல் இருக்க இப்படி ஒரு உத்தியாம். முதலிடம் கிட்டாமல் இரண்டாமிடம் கிட்டி அழுபவனை வேண்டுமானால் ’தங்கம் இல்லை என்றாலென்ன வெள்ளி மோசமில்லை’ என்று தேற்றலாம், அதை விடுத்து, தங்கம் வாங்க வாய்ப்புள்ள ஒருவர

A RIGHT MAN RIGHT PLACE RIGHT TIME !!!

சமீபத்தில் இதுபோல ஒரு செண்டிமெண்டை பார்த்ததாய் நினைவே இல்லை. நேற்று சாம்பியன் லீக்ஸ் மழையால் தடைபட்டதால், அனிச்சையாய் சேனல்கள் மாற்றிக்கொண்டே வந்தவன் அனிமல் ப்ளேனட் சேனலில் நிறுத்தினேன். ‘ UN TAMED UN CUT' எனும் நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. வனத்தை ஒட்டியிருந்த ஒரு பெரிய சாலையைக் கடக்க முயற்சித்த பெண் மான் ஒன்று மிக வேகமாய் வந்த ஒரு வாகனத்தில் அடிபட்டு, சாலையோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. ’ட்ராபிஃக் குளறுபடி எதனால் ?’ என்பதை பார்க்க வந்த அந்த விலங்கு நல ஆர்வலர், சற்றும் தாமதியாது அடிபட்ட அந்த மானுக்கு முதலுதவி தர முயல்கிறார்.   நேராக மானின் வாயை பிளந்து அவர் வாயை அப்படியே வைத்து ஊதுகிறார்.  சுவாசத்தை அதிகரித்து, இறக்கும் நிலையிலிருந்த அம் மானை, உயிர் பிழைக்க வைக்க முயற்ச்சிக்கிறார், ம்ஹும்........அந்த மான் இறந்துவிடுகிறது.  பிறகுதான் கவனிக்கிறார், அது ஒரு நிறைமாத கர்ப்பிணி. தாய் மான் இறந்துவிட்டதால் சுவாசம் கிட்டாது, அந்த பிஞ்சும் இறந்துவிடுமென கணிக்கிறார்.  சரி, அதையாவது காப்பாற்ற முடியுமா எனப் பார்க்க, இறந்த மானின் வயிற்றைக் கிழித்து, அந்தக் குட்டியை, ரத்த

காதலெனும் புனிதம் !!!

படம்
தர்மபுரி கலவரத்துக்கு காரணமான இளவரசன் & திவ்யா காதல் ஜோடி மனக்கசப்பில் பிரிந்தது - ஊடகச் செய்தி இது ஒரு சாதாரண நிகழ்வு.  காதலித்து எல்லா எதிர்ப்புகளையும் மீறி கல்யாணம் பண்ணி விட்டோம் என்பதற்காக மனமொப்பாதவனோடு/ளோடு வாழ்ந்தாக வேண்டுமென்பதுதான் பெருந்தவறு. இப்போது இது ஒரு விடுதலை.  கொடுமை என்னவென்றால் இதை வைத்து இழந்த உயிர்களும், உடைமைகளும்தான்.  காதல் தவறு அல்லது காதல் சரி என்று சொன்ன எல்லோர் முகத்திலும் கரி.  இதைப் பெரிது படுத்துவதன் மூலம் ஊடகங்கள் மறைமுகமாக ஆதிக்கச் சாதிகளுக்கு வக்காலத்தும், காதலுக்கு எதிராகவும் நடந்துக் கொள்கின்றன, என்பதை உணரவில்லை.  ஆனால் இதிலிருந்து இளைஞர்கள் அவசியம் பாடம் கற்கலாம்.  பள்ளிக்கல்வி/கல்லூரி படிக்க வேண்டிய காலகட்டத்தில் காதலை சீரியஸாக கல்யாணம் வரை கொண்டுசெல்லத் தேவையேயில்லை.  காதலை மென்மையாக...... பேசி, கூட்டாய் பாடங்கள் படித்து, சினிமா, பீச், பார்க், கோயில் என ஊர் சுற்றி,  வரம்பு மீறாத தொடுகை என்று காதலை அற்புதமாக அனுபவிக்கலாம்.  நடுவிலேயே குழப்பம் ஏற்பட்டு காதலை கைவிட நேர்ந்தால் இரு மனமுமொத்து, கைகுலுக்கிவிட்டு கருணையின்றி அக்காதலை

சுஜாதாவும் சி.சு.செல்லப்பாவும் !!!

படம்
ஃபேஸ்புக்கில் ஒருமுறை எனக்கும்,  நண்பர் விஜய்பாஸ்கர் விஜய்க்கும் ஒரு கருத்து முரண்பாடு ஏற்பட்டு, பிறகது பிணக்கில் முடிந்துபோனது. இந்தப் பிணக்கில் நிரந்தர பகை ஏதுமில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். ஆனால், அன்று, அவருடைய எந்தக் கருத்துக்கெதிராக பொங்கினேனோ, இன்று அதே கருத்தை ஆதரிக்கும் மாறுதல் என்னுள் ஏற்பட்டது !!!  எனக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலுக்கான பதிவை கடைசியில் சொல்கிறேன், என்னுடைய மனமாற்றத்தை மட்டும் இப்போது படியுங்கள். போன ஞாயிறு தினகரன் வசந்தம் இதழில் வெளியான, திருமதி.சுஜாதா ரங்கராஜனின் பேட்டியை, கட்டூரையாளர் ’சமஸ்’ வாயிலாக, அவதானித்ததில், சுஜாதாவின் மனைவி கூற்றானது, ’எழுத்துக்காகவே அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டாலும், சிறிதும் குடும்பத்தின் பால் பற்று வைக்கவில்லை.  முற்போக்கு எழுத்தாளராய் அறியப்பட்டாலும், தன்னிடம் ’பெண், வீட்டில் அடங்கிக் கிடக்கவேண்டுமென்ற’ மனப்பான்மையிலேயே நடந்துக்கொண்டார்.   தம்முடைய உற்றார்-உறவினர்களுடன் ஒட்டி உறவாடவில்லை.............ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்துவிடலாமா என்றெல்லாம் கூட எரிச்சல் உண்டானது. முழுக்க, முழுக்க கட்டுப்பாடான ஆச்சார,