காதலெனும் புனிதம் !!!

தர்மபுரி கலவரத்துக்கு காரணமான இளவரசன் & திவ்யா காதல் ஜோடி மனக்கசப்பில் பிரிந்தது - ஊடகச் செய்தி


இது ஒரு சாதாரண நிகழ்வு.  காதலித்து எல்லா எதிர்ப்புகளையும் மீறி கல்யாணம் பண்ணி விட்டோம் என்பதற்காக மனமொப்பாதவனோடு/ளோடு வாழ்ந்தாக வேண்டுமென்பதுதான் பெருந்தவறு.

இப்போது இது ஒரு விடுதலை.  கொடுமை என்னவென்றால் இதை வைத்து இழந்த உயிர்களும், உடைமைகளும்தான்.  காதல் தவறு அல்லது காதல் சரி என்று சொன்ன எல்லோர் முகத்திலும் கரி. 


இதைப் பெரிது படுத்துவதன் மூலம் ஊடகங்கள் மறைமுகமாக ஆதிக்கச் சாதிகளுக்கு வக்காலத்தும், காதலுக்கு எதிராகவும் நடந்துக் கொள்கின்றன, என்பதை உணரவில்லை. 

ஆனால் இதிலிருந்து இளைஞர்கள் அவசியம் பாடம் கற்கலாம்.  பள்ளிக்கல்வி/கல்லூரி படிக்க வேண்டிய காலகட்டத்தில் காதலை சீரியஸாக கல்யாணம் வரை கொண்டுசெல்லத் தேவையேயில்லை. 

காதலை மென்மையாக...... பேசி, கூட்டாய் பாடங்கள் படித்து, சினிமா, பீச், பார்க், கோயில் என ஊர் சுற்றி,  வரம்பு மீறாத தொடுகை என்று காதலை அற்புதமாக அனுபவிக்கலாம். 

நடுவிலேயே குழப்பம் ஏற்பட்டு காதலை கைவிட நேர்ந்தால் இரு மனமுமொத்து, கைகுலுக்கிவிட்டு கருணையின்றி அக்காதலை கொன்றுவிட்டு அடுத்த காதலைத் தேடிச் செல்லலாம். 


இதைவிட்டுவிட்டு, ’காதலின் வெற்றி என்றால் அது கல்யாணம்தான்’ என்று இந்த சின்னஞ்சிறுசுகளின் மனதில் காதலை பெரிய புனிதப் பிம்பமாக படியவைத்து, அவர்களின் இளமைக்கால வாழ்வியல் அழகையே குலைத்து விடுகிறோம்.

இந்த இழவெடுத்த காதலில் பொஸஸ்ஸிவ்னெஸ் இதனாலேயேத்தான் வந்து தொலைக்கிறது.  விளைவு, காதல் கல்யாணத்தில் முடியாது எனத் தெரியவரும்போது ஆசிட் அடிக்கிறான் அல்லது ஹனிமூனில் கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்.


காதலில் ’ஒத்துவாராது’ எனப் பிரிந்துவிட்டு, பிறகொரு சந்தர்ப்பத்தில் எங்காவது சந்திக்கும்போது, மிக மகிழ்ச்சியுடன் தம்முடைய இணைக்கு, ‘இன்னார்’ என அறிமுகப்படுத்தி, மலரும் இனிமையான நினைவுகளை அசைபோட்டு, அளவளாவி எந்த முகச் சுளிப்புமில்லாமல் விடைபெற்று கிளம்பினால்........அதுதானேய்யா உண்மையான காதல் வெற்றி !!!

ஆக, இது காதலின் தோல்வியல்ல.........காதலை தவறாகப் புரியவைத்த சினிமாவின்/இலக்கியத்தின்/ஊடகங்களின் தோல்வி :((


                                                                    ---  THE END  ---



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!