கற்பு !!!
கற்பென்பது !!!
========
ஒழுக்கம்தான் கற்பென்கையில்
ஒழுக்கத்தை சிதைத்து
குதறிக் கடித்தோடும் வெறிநாய்கள்
========
ஒழுக்கம்தான் கற்பென்கையில்
ஒழுக்கத்தை சிதைத்து
குதறிக் கடித்தோடும் வெறிநாய்கள்
கற்பழித்துவிட்டோம்
கற்பழித்துவிட்டோமென
ஓலமிட்டபடி சென்றால்
அழிந்தது கற்புதான்
யாருடையது என்பதுதானே
பிரதானக் கேள்வி ?
தன்னொழுக்கம் மீறி
வன்கலவி புரிந்தவனை
ஒழுக்கமழித்தவன் என்றழையுங்கள்
கற்பழிப்பெனும் வார்த்தையை இனியும்
பெண்ணிற்குரியதென்றே சொல்வீர்களேயானால்
நீவீரும் கற்பிழந்தவராகவே கடவது !
கருத்துகள்
கருத்துரையிடுக