கற்பு !!!

கற்பென்பது !!!
========
ஒழுக்கம்தான் கற்பென்கையில்
ஒழுக்கத்தை சிதைத்து
குதறிக் கடித்தோடும் வெறிநாய்கள்

கற்பழித்துவிட்டோம்
கற்பழித்துவிட்டோமென
ஓலமிட்டபடி சென்றால்


அழிந்தது கற்புதான்
யாருடையது என்பதுதானே
பிரதானக் கேள்வி ?


தன்னொழுக்கம் மீறி
வன்கலவி புரிந்தவனை
ஒழுக்கமழித்தவன் என்றழையுங்கள்


கற்பழிப்பெனும் வார்த்தையை இனியும்
பெண்ணிற்குரியதென்றே சொல்வீர்களேயானால்
நீவீரும் கற்பிழந்தவராகவே கடவது !








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!