என்ன ஜென்மம் நான் ?

இடம் பொருள் ஏவல் தெரியாமல் இன்று கொஞ்சமாய் அசிங்கப்பட்டேன், காரணம் சாரு !  தலைப்புகளும் சரி, கதாபாத்திரங்களின் பெயரும் சரி, அதை வைப்பதில்தான் நம்ம தல கில்லியாச்சே !  சம்பவம் நடந்த இடம் ஒரு பிரபல மருத்தவமனை வரவேற்பறை (நண்பர் ஒருவர் அலுவல் விஷயமாக போனார், அவருக்கு கம்பனி கொடுத்தேன்) காத்திருந்த வேளையில், சாரு நிவேதிதாவின் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன் !  அவ்வப்போது உள்ளே போயிருந்த நண்பர் வந்துவிட்டாரா என்று தலை நிமிர்த்தி பார்த்தேன் !  ஒவ்வொரு முறையும் யாரவது ஓரிருவர் என்னையும் என் கையிலிருந்த புத்தகத்தையும் விரோதமாக பார்த்ததைப் போல் தெரிந்தது !   'அடடா சாருவிற்கு எதிரிகள் இல்லாத இடமே கிடையாது போல'  என்று மனதில் நினைத்துக் கொண்டே ஆனால் தொடர்ந்து படித்தேன் !  அரைமணி நேரம் கழித்து வந்த நண்பர் "ஏன்டா இப்படி ஏன் மானத்த வாங்குற ?" என்றான் தலையில் அடித்துக்கொண்டே ! 
"என்ன ?"  
"என்னடா புக் இது ? "
"நீயே பாரேன்" 
"என்னத்த பாக்குறது இது என்ன
ஆஸ்பிடல்ன்னு தெரியுமா ?  புள்ளபாக்கியம்  இல்லாதவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற ஆஸ்பிடல்" என்று மெல்ல காதில் கிசுகிசுத்தான்  !  அப்போதுதான் உறைத்தது நான் படித்துக் கொண்டிருந்தது 'எனக்கு குழந்தைகளை பிடிக்காது'      

கருத்துகள்

  1. ரசித்துப் படித்தேன்! இயல்பான வாழ்க்கையில் நடக்கும் இதைப் போன்ற சம்பவங்கள் உலக இலக்கியங்களில் கூட கிடைக்காது!!!

    பதிலளிநீக்கு
  2. இதுபோல நிகழ்வுகள் பலருக்கும் நடந்திருந்தாலும் அதை அழகாக வெளிப்படுத்த எல்லோரும் இரசிக்கும் வண்ணம் சொல்ல ஒரு திறமை வேண்டும்..அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது...வாழ்த்துக்களும்..பாரட்டுக்களும்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!