பிறழ்வு

வெட்கம் பிடுங்கித் தின்கிறது
சுற்றுமுற்றும் பார்க்கிறேன்
கூட்டம்கூட்டமாய் மக்கள்வெள்ளம் 


கல்லூரிமுடிந்து செல்லும் கன்னியர்
அவருக்கு சமைக்கணுமே என ஓடும் மங்கையர்
போயிருப்பாளோ வென பதைத்தபடி செல்லும் விடலையர் 


என்னைப்போலவே ஒரு சொறிநாய்
என்னைப்போலவே ஒரு பொலிகாளை
என்னைப்போலவே ஒரு சேற்றுப்பன்றி


நிற்கிறேன் நடக்கிறேன் ஓடுகிறேன் 
இதுவரை யாரும் என்னைப் பார்க்கவில்லை
பார்த்துவிட்டால் இவ்வுலகில் எனக்கு வேலையில்லை


நிர்வாணமாய் நானிருக்கிறேன்
மானம் மறைக்க ஆடைதேடி விழியால் மேய்கிறேன்
பொட்டுத் துணியில்லை அக்கம்பக்கம்


வழக்கம்போல் சூழ்கிறது இருள்
பாய்ந்து பதுங்குகிறேன் மறைவொன்றில்
தற்காலிகமாய் கிடைக்கிறது  விடுதலை 


எப்போதும் போல் விழிக்கிறேன் தாமதமாய்
எழுந்தவுடன் பார்த்தால் விலகியிருந்தாலும் கைலியிருந்தது
ஏன் வருகிறது இந்தக் கனவு அடிக்கடி ?











கருத்துகள்

  1. என்னைப்போலவே ஒரு சொறிநாய்
    என்னைப்போலவே ஒரு பொலிகாளை
    என்னைப்போலவே ஒரு சேற்றுப்பன்றி// நல்ல உவமானம்! கனவுகளின் புரியாத புதிருக்கு பொருத்தமான வரிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் புரிதலுக்கு தலை வணங்குகிறேன், நன்றி !

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!